கரூர், ஜூலை 4: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் 2023 – 24ம் கல்வியாண்டில் இளங்கலை பட்டப்படிப்பு வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. புத்தாக்க பயிற்சி காலை 10 மணிக்கு கலைப் பிரிவினருக்கும், மதியம் 2.30 மணிக்கு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் என 2 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தாந்தோணிமலை காவல் நிலைய எஸ்ஐ அழகுராம் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும், கல்லூரியில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்லூரி விதிமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டியவழிமுறைகள், கல்வி விரிவாக்க அமைப்புகள், நூலகப் பயன்பாடு போன்றவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கல்லூரி முதல்வர் உட்பட அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டு பேசினர். மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய நேரத்தில் கல்லூரிக்கு வந்து வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு அறிவுரைகளை கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.
The post தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.